Press "Enter" to skip to content

மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு அறிவித்தது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதில், புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், மூன்றாவது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு என்றும் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மொழி என்ன என்பது மாநில அரசுகளின் விருப்பம், எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் கல்வி அமைச்சம் கூறி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »