நாம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலையும் கட்டுப்படுத்தவில்லை, பொருளாதாரத்தையும் தக்கவைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காரசார விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்களவையில், வேளாண் மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், மக்களவையில் தற்போது நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த விவதானத்தின் போது எம்.பி.யும், எதிர்க்கட்சியான காங்கிரசின் மூத்த தலைவருமான சசிதரூர் கூறுகையில்,’நாம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலையும் கட்டுப்படுத்தவில்லை, பொருளாதாரத்தையும் தக்கவைக்கவில்லை.
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக நாட்டின் ஜிடிபி உண்மையில் மூழ்குகிறது. இரண்டு உலகிலுமே நாம் மிகவும் மோசமாக உள்ளோம்’ என்றார்.
Related Tags :
Source: Maalaimalar