தமிழகத்தில் புதிய தொடர் வண்டி பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்குதொடர்வண்டித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘தமிழகத்தில் புதிய தொடர் வண்டி பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடியும் வரைதொடர்வண்டித் துறையில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது.
புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar