Press "Enter" to skip to content

டெல்லியில் இன்று மேலும் 3,816 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 3,816 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு 2.53 லட்சத்தைத் தாண்டியுள்ளது

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது.
 
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,53,075  ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,051 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு 31,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து இன்று 3,907 பேர் குணமடைந்த நிலையில், தற்போதுவரை 2,16,401  பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »