Press "Enter" to skip to content

ஐ.நா. ஊழியர்கள் எங்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் – ஐ.நா. கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் அதிரடி

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் தன்னார்வாக எங்கள் ஸ்பட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ:

ஐ.நா. பொது சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி வழியே கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களும் பேசுகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. கூட்டத்தில் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் காணொளி கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். 

ஐ.நா. கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-

மருத்துவர்களின் அறிவியல், தொழில்த்துறை மற்றும் பரிசோதனை அனுபவங்களின் மூலம் கொரோனா வைரசை கண்டறிந்து சிகிச்சையளிக்க பலவிதமான சோதனை முறைகள் மற்றும் மருந்துகளை ரஷியா உருவாக்கியுள்ளது, மேலும், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி-யை நாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாங்கள் முற்றிலும் வெளிப்படையான மற்றும் கூட்டாகாகவும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசியை உருவாக்குவது தொடர்பாக எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்பமுல்லா நாடுகள் பங்கேற்கும் வகையில் கூடிய விரைவில் உயர்மட்ட அளவிலான கணினிமய மூலம் காணொளி கருத்தரங்கு ஒன்று ஏற்பாடும் செய்யலாம் என இந்த சபை மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்ற நாடுகளிலும் நம்பகமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கவும், கொரோனா தடுப்பூசி தொடர்பான எங்கள் அனுபவங்களை பகீர்ந்து கொள்ளவும், தடுப்பூசி குறித்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். 

மற்றவர்களுக்கு பரவியது போன்றே பல்வேறு பகுதிகளில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களும், அதன் தலைமையிடத்தில் இருக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபைக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு தொடர்பாக தேவையான உதவிகளை செய்ய ரஷியா தயாராக உள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக ஊழியர்கள் விருப்பத்தின் பெயரில் வந்தால் அவர்களுக்கு எங்கள் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக வழங்க நாங்கள் முன்வருகிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »