இந்தோ- சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
லடாக்:
இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது
இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
கடந்த 24 மணி நேரத்தில் லடாக்கில் ஏற்பட்டுள்ள இரண்டாவது நிலநடுக்கம் இது. முன்னதாக,நேற்று மாலை 4.27 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar