சென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தியாகராய நகரில் உள்ள மூசாதெருவில் மொத்த வியாபாரம் நடைபெறும் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடையில் இருந்து 4 கிலோ தங்கம், 15 தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
[embedded content]
Source: Maalaimalar