Press "Enter" to skip to content

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

லண்டன்:

டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு பிரிவில் டோமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர். ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மற்றொரு பிரிவில் நடந்த போட்டியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) – சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார். 

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர். 

இதில் 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஸ்வெரேவ்வை தோற்கடித்தார் ஜோகோவிச். இதன்மூலம் ஜோகோவிச் 9-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் நடால் (ஸ்பெயின்) – மெத்வதேவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா) – டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »