Press "Enter" to skip to content

பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

‘விடியலை நோக்கி’ என புதுப்புது பெயர் சூட்டினாலும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் தி.மு.க. எடுக்கும் படங்கள் ஓடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை:

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சட்டமன்ற தேர்தலையொட்டி, முன்கூட்டியே தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதே?

பதில்:- காங்கிரசுடன் மத்தியில் 17 வருடங்கள் தி.மு.க. தூங்கி கிடந்தது. குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார் என்பது போல, கோட்டையையும் தி.மு.க. விட்டுவிட்டது. விடியாத ஒரு இருட்டைத்தான் தி.மு.க. தமிழகத்துக்கு தந்தது. நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்துவிட்டு, நாட்டையும் கெடுத்து, தானும் கெட்ட தி.மு.க.வுக்கு இனி கோட்டை என்பதே கிடையாது.

தேர்தல் என்றால்தான் தி.மு.க.வுக்கு மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள். எங்களுக்கு திட்டங்கள் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. எனவே தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வை அரியணை ஏற்றுவதற்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

எனவே கனிமொழி எம்.பி. எடப்பாடியில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தாலும் சரி, இமயமலையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றாலும் சரி எங்களுக்கு கவலையில்லை. அதேவேளை ‘விடியலை நோக்கி’, என தி.மு.க.வுக்கு புதுப்புது தலைப்புகளை(பெயர்கள்) பிரசாந்த் கிஷோர் கொடுத்து வருகிறார். இப்படி தலைப்புகளில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நிச்சயம் ஓடாது.

மேற்கண்டவாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »