வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தைத் தாண்டியது.
டாக்கா:
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 25-வது இடத்தில் உள்ளது.
வங்காளதேசத்திலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.5 லட்சத்தைத் தாண்டியது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,230 பேருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,51,990 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு 32 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 3.66 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar