Press "Enter" to skip to content

அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்- விமானிடை தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

புதுடெல்லி:

இந்திய கடற்படையின் பயிற்சி விமானமான மிக்-29கே ரக விமானத்தில் நேற்று விமானிடுகள் அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்த ஒரு விமானி மீட்கப்பட்டதாகவும், மற்றொரு விமானிடை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கடற்படை கூறி உள்ளது.

இந்திய கடற்படையின் கோவா தளத்தில் 40 மிக்-29 கே ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »