Press "Enter" to skip to content

டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு சிகப்பு ஆபத்து எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.

மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி அடைமழை (கனமழை)யும், வட தமிழகத்தில் அடைமழை (கனமழை) முதல் பெரும் அடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »