Press "Enter" to skip to content

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு – நரேந்திர சிங் தோமர்

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை காவல் துறையினர் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், அரியானா-டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசுடன் இன்று (டிசம்பர் 1ம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »