Press "Enter" to skip to content

சென்னை புறநகர் சிறப்பு தொடர் வண்டி சேவை 244-ல் இருந்து 320 ஆக அதிகரிப்பு – தெற்குதொடர்வண்டித் துறை

சென்னை புறநகர் தொடர் வண்டி சேவையின் தொடர் வண்டி எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு தொடர்வண்டித் துறை தெரிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் தொடர் வண்டி சேவை கடந்த மாதம் அத்தியாவசிய பணியாளர்களும், பெண்களும் பயணிக்க மீண்டும் தொடங்கியது. 

சென்னையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவன ஊழியர்களுக்காக 244 சிறப்பு மின்சார தொடர் வண்டிகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை புறநகர் தொடர் வண்டி சேவையின் தொடர் வண்டி எண்ணிக்கை டிசம்பர் 7-ம் தேதி முதல் 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை 7.00 – 9.30 மணி வரையும், மாலை 4.30 – 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »