Press "Enter" to skip to content

இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது

இத்தாலி நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ரோம்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 10,800 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.66 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு 348 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 15.20 லட்சத்தைக் கடந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »