சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 87.18 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, கல்லெண்ணெய், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் நேற்று கல்லெண்ணெய், லிட்டர் 86.96 ரூபாய், டீசல் லிட்டர் 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கல்லெண்ணெய் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.87.18 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.79.95 ஆகவும் உள்ளது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar