Press "Enter" to skip to content

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7  கோடியைத் தாண்டியது. 

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.75 கோடியைக் கடந்துள்ளது. 

மேலும், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20.90 லட்சத்தைத் தாண்டியது. 

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களில் 2.50 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.11 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »