Press "Enter" to skip to content

நேதாஜியின் 125வது பிறந்தநாள் – கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள முதலாவது துணிச்சல் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புதுடெல்லி:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை துணிச்சல் தினமாக (பராக்கிரம் திவாஸ்) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய மந்திரி பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார்.

கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்கிறார். நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மோடி கவுரவிக்கிறார்.

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள முதலாவது துணிச்சல் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »