Press "Enter" to skip to content

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர். காவல் துறையினர் தடுத்தும் எந்த பலனும் இல்லை. காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர்.

செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்

இதற்கிடையில் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »