பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மேற்கு வங்காளம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 200 தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. இதனால் அங்கு பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 7-ம் தேதி மேற்கு வங்காளம் செல்ல இருப்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது ரூ.4,742 கோடி மதிப்புள்ள 3 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar