இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை:
2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது.
கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இம்முறையும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
சட்டசபையில் ஆளுநர் தனது உரையை தொடங்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை தொடங்கினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar