Press "Enter" to skip to content

இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,202 பேருக்கு தொற்று உறுதி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்:

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.46 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை 22.69 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 38,71,825 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,322 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,87,706 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 19,74,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »