பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருக்கும் சசிகலா, அதிமுக-வின் பொது எதிரி ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையான பின், முதன்முறையாக மவுனம் கலைத்து இன்று பேட்டிளியத்தார்.
அப்போது சசிகலா கூறியதாவது:-
* தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை.
* தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
* விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன்.
* ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
* அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை.
* தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை.
* ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்
* அதிமுக பொது எதிரி் ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம்
* அதிமுக முன்னேற்றத்திற்காக எனது வாழ்நாளை அர்ப்பணிப்பேன்
இவ்வாறு சசிகலா கூறினார்.
மேலும், அதிமுக அலுவலகத்திற்கு செல்வது குறித்து கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar