புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286.91 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், புயல், வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியாக ரூ.3113.15 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிப்படைந்த தமிழகத்துக்கு 286.91 கோடி ரூபாய், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 9.91 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர பெரு வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்த பீகாருக்கு ரூ.1255.27 கோடியும், தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கை எதிர்கொண்ட ஆந்திரபிரதேச மாநிலத்துக்கு 280.78 கோடி ரூபாயும் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வெட்டுகிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்துக்கு 1280.18 கோடி ரூபாய் நிதி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2020-21 நிதியாண்டில் 19,036.43 கோடி ரூபாய் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 4409.71 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar