Press "Enter" to skip to content

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது – கொடிகள், சுவரொட்டிகள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரோந்து பணியில் 2 பயங்கரவாதிகளை கைது செய்த இந்திய ராணுவம் கொடிகள், பேனர்களை பறிமுதல் செய்துள்ளது.

ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் நகரில் காவல் துறையினர் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து கூட்டாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தது.

இந்நிலையில், லஷ்கர் இ தொய்பா மற்றும் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் என்ற இரு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், அவர்களிடம் இருந்த கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் லெட்டர் பேடு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  அவர்கள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »