தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை:
கோவையில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம்.
* தமிழகத்தில் இருந்து 600 பேர் வரை சென்றுவந்த நிலையில் இனி 1,000 ஆக உயர்த்தப்படும்.
* அவரவர் மதம் அவரவருக்கு பெரியது. மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
* தமிழக கல்வித்தரம் உயர்வுக்கு கிறிஸ்தவ பள்ளிகள் முக்கிய காரணம்.
* தேர்தலில் கூட்டணி மாறும், ஆனால் கொள்கைகள் மாறாது.
* சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar