அர்ஜெண்டினா நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பியூனோ அய்ரஸ்:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அர்ஜெண்டினா 12-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20,25,798 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு அங்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.27 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar