Press "Enter" to skip to content

திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்

திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

மும்பை:

14-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் வந்தார். ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணியே ஏலத்தில் எடுத்தது. 

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் தேர்வானது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது. 

இந்நிலையில், திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியிருப்பதாவது:

நாங்கள் முற்றிலும் திறன் அடிப்படையில் மட்டுமே இதை அணுகினோம். ஏனெனில், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கப்போகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் (அர்ஜுன்) பந்துவீச்சாளாராக உள்ளார்.  

எனவே அர்ஜுனைப் போல பந்து வீச முடிந்தால் சச்சின் மிகவும் பெருமைப்படுவார் என்று நான் நினைக்கிறேன்.  அர்ஜுனுக்கு ஒரு கற்றல்  நடைமுறையாகவே  இருக்கப்போகிறது என நான் நினைக்கிறேன். அவர் இளம் வீரர் என்பதால் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே, அவருக்கு நாம் உரிய நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு அதிகமான அழுத்தங்களை கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »