Press "Enter" to skip to content

புதுச்சேரியில் இதுவரை நடந்த ஆட்சி கவிழ்ப்புகள்

புதுச்சேரி அரசியலும், ஆட்சி கவிழ்ப்பும் எப்போதும் பிரிக்க முடியாததாகத்தான் அமைந்துள்ளன. பிரெஞ்சு விடுதலைக்குப் பின் அமைந்த ஆட்சிகள் பெரும்பாலும் கவிழ்ப்புக்குள்ளானதுதான் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த 1974-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை சேர்ந்த ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். பெரும்பான்மை இல்லாததால் அவரது ஆட்சி 21 நாட்களில் கவிழ்ந்தது. பின்னர் ஜனாதிபதி ஆட்சி நடந்தது.

அதன்பின் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ராமசாமி முதல்-அமைச்சர் ஆனார். அவரது ஆட்சி 1½ ஆண்டுகாலம் மட்டுமே நீடித்தது. 1990-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.-ஜனதாதளம் கூட்டணி வெற்றிபெற்றது. தி.மு.க.வை சேர்ந்த டி.ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் கோ‌‌ஷ்டிபூசல் காரணமாக அவரது ஆட்சி 11 மாதத்திலேயே கவிழ்ந்து போனது.

1996 தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி வென்றது. தி.மு.க.வை சேர்ந்த ஜானகிராமன் முதல்-அமைச்சர் ஆனார். 2000-ம் ஆண்டில் த.மா.கா. விலகியதால் அரசு கவிழ்ந்தது.

2001-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சண்முகம் தலைமையிலான அமைச்சரவை உருவானது. தேர்தலில் போட்டியிடாததால் 6 மாதத்தில் அவர் பதவி விலக நேரிட்டது.

2006 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆனார். அமைச்சரவையில் அவருக்கு ஒத்துழைப்பு இல்லாததால் 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.

2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று நாராயணசாமி முதல்-அமைச்சர் ஆனார். எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமா காரணமாக அவரது அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »