Press "Enter" to skip to content

27-ம் தேதி முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 27-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் குழுயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராகுல் காந்தி 27-ம் தேதி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாங்குநேரி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வார் என்றும், 28-ம் தேதி பாளையங்கோட்டை, நெல்லை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஆதரவு திரட்டுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 1-ம் தேதி குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »