விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் குடும்ப அரசியலை கடுமையான வகையில் விமர்சித்து அமித் ஷா பேசினார்.
பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமித் ஷா பேசுகையில் ‘‘சோனியா காந்தி ராகுலை பிரதமராக்குவது குறித்து கவலைப்படுகிறார். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்குவது குறித்து கவலைப்படுகிறார். அவர்கள் ஊழல், பிரித்தாளும் அரசியலை பின்பற்றுகிறார்கள்.
காங்கிரஸ் 12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டது. அந்த நேரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. 2ஜி, 3ஜி, 4ஜி என அனைத்து ஜி-களும் தமிழகத்தில் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறை. 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் 3 தலைமுறை என்று அர்த்தம். 4ஜி என்பது காந்தி குடும்பத்தின் 4 தலைமுறை என்று அர்த்தம்’’ எனக் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar