Press "Enter" to skip to content

ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் – ராகுல் காந்தி

74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பா.ஜ.க. ஆட்சியையும் அகற்ற முடியும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

திருநெல்வேலி:

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அருகில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்பட பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல் பா.ஜ.க. ஆட்சியையும் அகற்ற முடியும்.

கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.

சிறு மற்றும் குறுந்தொழில்களின் முதுகெலும்பை ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் முறித்து விட்டனர் என குற்றம் சாட்டினார்.

பிரசாரத்தின் போது கடைக்கு சென்று தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் உரையாடினார்.

மேலும், பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தினார். அப்போது அவரிடம் வருவாய், குடும்ப சூழல் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றை கேட்டறிந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »