2019 உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் பங்கேற்ற முதல் போட்டியில் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்து நாட்டில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியாவின் பி.வி. சிந்துவும், டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டும் மோதினர்.
முதல் செட்டை சிந்து 22-20 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி வெறும் 43 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இறுதிப்போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் பிவி சிந்து மோத உள்ளார்.
2019 உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர் சிந்து பங்கேற்கும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar