Press "Enter" to skip to content

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தி.மு.க-காங்கிரஸ் இடையே நேற்று இரவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஒரு மாநிலங்களவை இடமும் கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »