Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து

மார்டின் குப்திலின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி 20 போட்டியை 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.

வெலிங்டன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த ஆஸ்திரேலியா 8 மட்டையிலக்குடுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்தது. வேட் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ஓட்டங்கள் குவித்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
 
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் 143 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 36 ரன்னும், பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.

ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கும், தொடர் நாயகன் விருது இஷ் சோதிக்கும் அளிக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »