Press "Enter" to skip to content

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

அப்போது செய்தியாளர்கள், திமுக ஏற்கனவே ரூ.1000 அறிவித்துள்ளனர் என்று கேள்வி ஏழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது என்றார்.

அதிமுக அமமுக இணைப்பு இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன் என்றும் அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »