Press "Enter" to skip to content

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரேயொரு தேர்வுத் தேதி மட்டும் மாற்றம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகலாம் என பேச்சு எழுந்தது.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் மொழிப்பாட தேர்வு மட்டும் மே 3-ந்தேதிக்குப்பதில் மே 31-ந்தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தேர்வுகள் சமூக இடைவெளியுடனும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடனும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »