தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார தொடர் வண்டிகள் இயங்கும் என்று தெற்குதொடர்வண்டித் துறை அறிவித்துள்ளது.
சென்னை:
தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சென்னை சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்ப்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு/திருமால்பூர் பிரிவுகள் இடையே ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார தொடர் வண்டிகள் இயக்கப்படும். அந்த வகையில் 449 மின்சார தொடர் வண்டி சேவைகளே அன்று இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar