Press "Enter" to skip to content

தமிழகத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ந்தேதி வரை நடைபெறும் செய்முறை தேர்வை 1.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர்.

சென்னை:

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு, மதிப்பெண் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருந்தார்.

அதனை பின்பற்றி இன்று தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறையுடன் மாணவர்களுக்கு பிளஸ் 2 செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ந்தேதி வரை நடைபெறும் செய்முறை தேர்வை 1.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »