Press "Enter" to skip to content

கமாண்டோ அதிகாரி கொரோனாவால் பலி – தேசிய பாதுகாப்பு படையில் முதல் மரணம்

துணை ராணுவ படைகளில் இதுவரை 66 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7 ஆயிரத்து 900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுடெல்லி:

தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) கமாண்டோ அதிகாரியாக இருந்தவர் பி.கே.ஜா. 53 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள மத்திய ஆயுதப்படை காவல் துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் மரணம் அடைந்தார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் தேசிய பாதுகாப்பு படையில் முதல் உயிர்ப்பலி இதுவாகும்.

துணை ராணுவ படைகளில் இதுவரை 66 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7 ஆயிரத்து 900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »