Press "Enter" to skip to content

கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு – தமிழக அரசு உத்தரவு

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி 2020-ம் ஆண்டு மே 7-ந் தேதி அறிவுரைகள் வழங்கப்பட்டன.

சென்னை:

தமிழகத்தின் அனைத்து கூடுதல் பதிவாளர்கள், இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி 2020-ம் ஆண்டு மே 7-ந் தேதி அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 25-ந் தேதியன்று, அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60-ஆக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதையும் 59-ல் இருந்து 60-ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »