Press "Enter" to skip to content

டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 257 கோடி தடுப்பூசி இருக்கும் – ஜே.பி.நட்டா தகவல்

உலகிலேயே மிகப்பெரிய, வேகமான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடந்து வருவதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி:

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியின் தடுப்பூசி மையத்துக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகிலேயே மிகப்பெரிய, வேகமான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் 9 மாதத்துக்குள் 2 தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். மோடியின் அழைப்பை ஏற்று 130 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அவர்களுக்கு முழு வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடுவதற்காக, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவின் கைவசம் 257 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும்.

தடுப்பூசியை பரிசோதிக்க நாங்கள் என்ன எலிகளா என்று கேட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »