கொலம்பியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்குகிறது.
கொலம்பியா:
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 10-வது இடத்தில் உள்ளது
இந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அங்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்குகிறது.
கொரோனா தொற்றில் இருந்து 36.85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் 1.81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar