Press "Enter" to skip to content

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

சென்னை: 

தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »