டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 165 ஓட்டங்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய ஜெகதீசன் 95 ஓட்டங்கள் விளாசினார். சசிதேவ் 20 ரன்களும், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் 19 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி மட்டையாட்டம் செய்தது. துவக்க வீரர்களாக கேப்டன் பாபா அபராஜித், சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். சூர்யபிரகாஷ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் அபராஜித், 55 ஓட்டங்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.
அதன்பின்னர் 3வது மட்டையிலக்குடுக்கு இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரஞ்சன் பால் அரை சதம் கடந்து அதிரடியை தொடர்ந்தார்.
கடைசி சுற்றில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் ரஞ்சன் பால் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 160. அதன்பின்னர் 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்து வைடு ஆனது. அடுத்த பந்தில் பாபா இந்திரஜித் அபாரமாக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar