Press "Enter" to skip to content

உ.பி.யில் பஸ் மீது பார வண்டி மோதி 18 பேர் பலி

பஸ் மீது பார வண்டி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பஸ் மீது பார வண்டி மோதிய விபத்தில் 18 பேர் பலியாகினர்.

லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பாக  உ.பி. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »