Press "Enter" to skip to content

மல்யுத்தம்- ரெபிசாஜ் வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வி

இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் கடைசி வரை சிறப்பான போராடி, கடைசி நிமிடத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு ஏமாற்றம் அடைந்தார்.

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ‘ரெபிசாஜ்’ வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் ரஷியாவின் வளரியா கோப்லோவா எதிர்கொண்டார்.

இதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு வீராங்கனைகளும் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடினார்கள்.

இருவரும் பிடிகொடுக்காமல் விளையாடினார்கள். முதல் மூன்று நிமிடத்தில் நுட்பம்கல் முறையில் ரஷிய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார்.

அடுத்த மூன்று நிமிடங்களிலும் சிறப்பான வகையில் மல்லுக்கட்டினர். இந்த முறை நுட்பம்கல் முறையில் இந்திய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார். இதனால் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது.

கடைசி ஒரு நிமிடத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் ரஷிய வீராங்கனையிடம் மாட்டிக்கொண்டார்.  இதனால் 2, 2 என இரண்டு முறை ரஷிய வீராங்கனை புள்ளிகள் பெற்றார். ஆகவே, அன்ஷு மாலிக் 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »