18 வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
மொத்த தடுப்பூசி எண்ணிக்கையில் ஐரோப்பாவை இந்தியா மிஞ்சி விட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியா புதிய மைல்கல் சாதனை படைத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
17-ந் தேதி 2½ கோடி தடுப்பூசி போடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதற்காக ஏன் மோடி பிறந்தநாள்வரை காத்திருக்க வேண்டும்? ஒருவேளை, மோடி பிறந்தநாள் டிசம்பர் 31-ந் தேதி என்றால், ஆண்டின் கடைசி நாளில்தான் 2½ கோடி தடுப்பூசி போடுவார்களா?
18 வயதுக்கு மேற்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை. 21 சதவீதம்பேர் மட்டுமே 2 டோஸ் போட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar