Press "Enter" to skip to content

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »