Press "Enter" to skip to content

இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு

உள்ளூரில் விளையாடும் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரை உள்ளூரில் விளையாடும் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 

அதாவது, இந்திய அணி அடுத்த 9 மாத காலத்தில் சொந்த மண்ணில் 4 சோதனை, 3 ஒருநாள் மற்றும் 14 இருபது சுற்றிப் போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி நியூசிலாந்து அணி நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 2 சோதனை போட்டியில் பங்கேற்கிறது. 

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 சுற்றிப் போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17-ம் தேதியும், 2-வது 20 சுற்றிப் போட்டி ராஞ்சியில் 19-ம் தேதியும், 3-வது 20 சுற்றிப் போட்டி கொல்கத்தாவில் 21-ம் தேதியும் நடக்கிறது. முதலாவது சோதனை கான்பூரில் நவம்பர் 25-ம் தேதியும், 2-வது சோதனை மும்பையில் டிசம்பர் 3-ம் தேதியும் தொடங்குகிறது.

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பிப்ரவரி மாதத்தில் வந்து 3 ஒருநாள், மூன்று 20 சுற்றிப் போட்டியில் கலந்து கொள்கிறது. முதலாவது ஒருநாள் போட்டி ஆமதாபாத்திலும் (பிப்.6), 2-வது போட்டி ஜெய்ப்பூரிலும் (பிப்.9), 3-வது போட்டி கொல்கத்தாவிலும் (பிப்.12), முதலாவது 20 சுற்றிப் போட்டி கட்டாக்கிலும் (பிப்.15), 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் (பிப்.18), 3-வது போட்டி திருவனந்தபுரத்திலும் (பிப்.20) நடக்கிறது.

இதையடுத்து, இலங்கை அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணம் மேற்கொண்டு 2 சோதனை, மூன்று 20 சுற்றிப் போட்டியில் விளையாடுகிறது. 

முதல் சோதனை பெங்களூருவில் பிப்ரவரி 25-ம் தேதியும், 2-வது சோதனை மொகாலியில் மார்ச் 5-ம் தேதியும் தொடங்குகிறது. முதலாவது 20 சுற்றிப் போட்டி மொகாலியிலும் (மார்ச் 13), 2-வது போட்டி தர்மசாலாவிலும் (மார்ச் 15), 3-வது போட்டி லக்னோவிலும் (மார்ச் 18) நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்க அணி ஜூன் மாதத்தில் ஐந்து 20 சுற்றிப் போட்டியில் ஆடுகிறது. முதலாவது 20 சுற்றிப் போட்டி சென்னையிலும் (ஜூன் 9), 2-வது போட்டி பெங்களூருவிலும் (ஜூன் 12), 3-வது போட்டி நாக்பூரிலும் (ஜூன் 14), 4-வது போட்டி ராஜ்கோட்டிலும் (ஜூன் 17), 5-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியிலும் (ஜூன் 19) நடக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »